
மாநிலங்களவை தேர்தலில் போட்டியிட மனு தாக்கல் செய்த தம்பிதுரை, அன்புமணி ஆகியோருக்கு எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்தார்.
மாநிலங்களவை தேர்தலில் போட்டியிடும் பாமக தலைவர் அன்புமணி ராமாஸ் இன்று வேட்புமனு தாக்கல் செய்தார்.
தமிழ்நாட்டிலிருந்து மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட 6 உறுப்பினர்களின் பதவிக்காலம் வரும் ஏப்ரல் 2-ம் தேதியுடன் நிறைவடைகிறது. இந்த நிலையில், தமிழ்நாடு உட்பட நாட்டில் 10 மாநிலங்களில் காலியாக உள்ள 37 மாநிலங்களவை இடங்களுக்கு மார்ச் 16-ம் தேதி தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதனிடையே மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கான வேட்புமனுத் தாக்கல் இன்றுடன் நிறைவடையவுள்ளது.
தமிழ்நாட்டில் காலியாக உள்ள 6 மாநிலங்களவை பதவிகளுக்கு வேட்புமனு தாக்கல் செய்ய இன்று கடைசி நாளாகும். திமுக கூட்டணியில் மொத்தமுள்ள நான்கு இடங்களில் திமுக 2, காங்கிரஸ் 1, தேமுதிக 1 ஆகிய இடங்களில் போட்டியிடுகின்றன. அதேபோல் அதிமுக கூட்டணியில் அதிமுக1 , பாமக 1 ஆகிய இடங்களில் போட்டியிடுகிறது. வேட்புமனு தாக்கல் செய்ய இன்று கடைசி நாள் என்பதால் வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் செய்ய தீவிரம் காட்டி வருகின்றனர். , மாநிலங்களவை உறுப்பினர் தேர்தலுக்காக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் இன்று (மார்ச் 5) வேட்புமனு தாக்கல் செய்தார். சென்னை தலைமைச் செயலகத்தில் பாமக சார்பில் அன்புமணி ராமதாஸ், அதிமுக சார்பில் தம்பிதுரைஆகிய இருவரும் வேட்புமனுக்களை தாக்கல் செய்தனர்.



