உறுதியாக சொல்கிறேன் மீண்டும் வெல்வோம்- சட்டமன்றத்தில் மு.க.ஸ்டாலின் பேச்சு!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

தமிழ்நாட்டில் மீண்டும் நாங்கள்தான் ஆட்சி அமைப்போம் என்று சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதியளித்துள்ளார்.

தமிழ்நாடு சட்டப்பேரவையில் இடைக்கால பட்ஜெட் மீதான விவாதத்திற்கு பதிலுரை நடைபெற்று வருகிறது.அப்போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், ” 2021-ம் ஆண்டு நடைபெற்ற தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் திமுக ஆறாவது முறையாக வெற்றி பெற்ற போது ஒரு பக்கம் மகிழ்ச்சி இருந்தாலும், இன்னொரு பக்கம் எனக்கு கவலை இருந்தது. அதை நான் மறைக்க விரும்பவில்லை. இந்த பொறுப்பை நான் எப்படி செய்யப் போகிறேன். வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியுமா மக்கள் விரும்பக்கூடிய வகையில் ஆட்சி நடத்த முடியுமா, மக்கள் மகிழ்ச்சி அடையும் வகையில் ஆட்சி நடத்த முடியுமா என்ற கவலை தான் எனக்கு இருந்தது என்று நான் சொல்லியிருப்பேன். முந்தைய அரசுகளின் செயல்பாட்டின் காரணமாக, விளைந்த மிக மோசமான பின்னடைவு நமக்கு ஒத்துழைக்காத ஓரவஞ்சனை செய்யக்கூடிய ஒன்றிய அரசு.

தமிழ்நாட்டில் அனைத்து துறைகளும் எப்போது வளரும் என்ற ஏக்கத்தில் இருந்தவருடைய வருதத்தை போக்கி, சமச்சீரான வளர்ச்சியை இந்த ஐந்து ஆண்டுகளில் அடைந்திருக்கிறோம். திராவிட மாடல் அரசு தீட்டிய திட்டங்களை ஏத்திய சட்டங்களை மக்களின் வைத்துள்ளோம். நிதி நிலைமை சீராக இல்லாத நேரத்தில், அதனை காரணமாக சொல்லி சும்மா இருக்காமல் நிறைய திட்டங்களை செயல்படுத்தி இருக்கிறோம்.

திராவிட அரசால் இந்த ஐந்து ஆண்டுகளில் விடியல் பயணம், கலைஞர் மகளிர் உரிமை திட்டம் ,நான் முதல்வன் திட்டம், காலை உணவு திட்டம், புதுமைப்பெண் திட்டம் ,அரசு ஊழியர்களுக்கான உறுதி அளிக்கப்பட்ட ஓய்வுகை திட்டம் ,இன்னுயிர் காப்போம் ,நம்மை காக்கு 48 4,000 மேற்பட்ட திருக்கோயில்களை குடமுழுக்கு, குழந்தைகள் முதல் முதியோர் வரை ஆரம்பகள்ளி முதல் ஆராய்ச்சி கல்வி வரை, இளைஞர்கள் ,பெண்கள், விவசாயிகள் ,நெசவாளர்கள் ,விளிம்பு நிலையில் இருந்த ஆதிதிராவிட பழங்குடியின மக்கள் பிற்படுத்தப்பட்ட மக்கள், மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்கள், மாற்றுத்திறனாளிகள் என அனைத்து சமுதாயத்தினரும் வாழ்வில் உயர்வு கண்டிட எண்ணற்ற திட்டங்கள் செயல்பட்டது.

நான் இந்த ஐந்தாண்டு காலத்தில் எனக்கும் என் மனசாட்சிக்கு மட்டுமே கட்டுப்பட்டு வைத்திருக்கிறேன், இன்னும் உழைக்க காத்திருக்கிறேன், நாளைய தமிழ்நாடு நிச்சயம் நெஞ்சில் தாங்கி, நம்மை வரவேற்க நம்பிக்கை எனக்கு இருக்கிறது. உறுதியாக சொல்லுகிறேன் மீண்டும் வெல்வோம் மீண்டும் ஆட்சி வந்த அமைப்போம் மீண்டும் வந்து தமிழ் மக்களுக்கான திட்டங்களை தொடர்ந்து செயல்படுத்துவோம்” என்றார்.

இப்போதே பகிருங்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *