போர் பதற்றத்தால் பயணிகள் அவதி… சென்னையில் 36 விமானங்கள் ரத்து

சென்னை விமான நிலையம்

இஸ்ரேல், ஈரான் போர் பதற்றம் காரணமாக சென்னைக்கு வர வேண்டிய, புறப்பட வேண்டிய 36 விமானங்கள் இன்று ரத்து செய்யப்பட்டுள்ளன.

போர்
ஈரான் மீது இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா திடீரென தாக்குதல்களை நடத்த தொடங்கின. இதையடுத்து பதிலுக்கு அமெரிக்காவின் ஏவுதலங்கள் இருக்கும் பகுதிகளை, ஏவுகணைகள் ராக்கெட்டுகளை வீசி ஈரான் தாக்குதலை நடத்த தொடங்கியது. இதை அடுத்து மத்திய கிழக்கு நாடுகள் பகுதியில், கடந்த சனிக்கிழமை முதல், பெரும் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் ஈரான் உள்ளிட்ட சில நாடுகள் தங்களுடைய வான்வழிப் பகுதிகளை மூடிவிட்டன.

விமான சேவை
இதனால் மத்திய கிழக்கு பகுதிகளில் விமான சேவைகள் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளன. இந்தநிலையில் சென்னை விமான நிலையத்தில் இருந்து, சனிக்கிழமை துபாய், அபுதாபி, பஹ்ரைன், மஸ்கட், இயக்கப்படும் 16 வருகை விமானங்களும், அதைப்போல் புறப்பாடு விமானங்கள் 12, மொத்தம் 28 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. நேற்று (மார்ச் 1) வளைகுடா நாடுகள், மத்திய கிழக்கு நாடுகள் ஆகியவற்றுக்கு புறப்பட்டு செல்லும் அதைப்போல் அங்கிருந்து சென்னைக்கு வரும் 33 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.

விமானங்கள் ரத்து
இந்த நிலையில், இன்று (மார்ச் 2) மூன்றாம் நாளாக சென்னை விமான நிலையத்தில் வளைகுடா ஐக்கிய அரபுகள் மற்றும் மத்திய கிழக்கு நாடுகளுக்கு செல்லும் விமானங்கள் ரத்து செய்யப்படடுள்ளன. சென்னையில் இருந்து துபாய், அபுதாபி, சார்ஜா, பக்ரைன், குவைத், மஸ்கட் உள்ளிட்ட 18 புறப்பாடு விமானங்கள், அதைப்போல் இந்த நாடுகளில் இருந்து சென்னைக்கு வரவேண்டிய 18 வருகை விமானங்கள், மொத்தம் 36 விமானங்கள், இன்று ரத்து செய்யப்பட்டுள்ளன. மேலும் இந்த எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்று கூறப்படுகிறது.

பயணிகள் அவதி
லண்டன், அமெரிக்கா, ஜெர்மன் உள்ளிட்ட நாடுகளில் இருந்து சென்னை வரும் பல்வேறு விமானங்கள், ஈரான், மத்திய கிழக்கு நாடுகளின் வான் வொளிகளை கடந்து வரவேண்டிய நிலையில் உள்ளன. ஈரான் உள்ளிட்ட நாடுகளின் வான்வெளிகள் மூடப்பட்டுள்ளதால், மாற்றுப் பாதைகளில் சுற்றி வருவதால், அந்த விமானங்கள் சென்னைக்கு வந்து விட்டு, மீண்டும் புறப்பட்டு செல்வதற்கு பல மணி நேரம் தாமதம் ஆகலாம், அல்லது விமானம் ரத்து செய்யப்பட வாய்ப்பு உள்ளது.

எனவே மற்ற விமானங்களில் பயணம் செய்ய இருக்கும் பயணிகளும், குறிப்பாக அமெரிக்கா ஐரோப்பிய நாடுகளுக்கு பயணம் செய்ய இருக்கும் பயணிகள், அந்தந்த விமான நிறுவனங்களுடன் தொடர்பு கொண்டு, தங்களுடைய விமானங்கள் வரும் நேரம், மீண்டும் சென்னையில் இருந்து புறப்பட்டு செல்லும் நேரம் போன்றவைகளை தெளிவாக தெரிந்து கொண்டு, அதற்குத் தகுந்தார் போல் தங்கள் பயணங்களை அமைத்துக் கொள்ளும் படியும் அறிவுறுத்தி உள்ளனர். இந்தநிலையில் சென்னையில் இருந்து வளைகுடா நாடுகள் மற்றும் ஐக்கிய அரபு நாடுகளுக்கு செல்லும் விமானங்கள் அனைத்தும் ஒட்டு மொத்தமாக ரத்து செய்யப்பட்டுள்ளதால் பயணிகள் பெரும் அவதி அடைந்து வருகின்றனர்.

இப்போதே பகிருங்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *