2 மாதங்களுக்கு 200 யூனிட் இலவச மின்சாரம்: முக்கிய உத்தரவு

தமிழ்நாட்டில் 2 மாதங்களுக்கு 200 யூனிட் இலவச மின்சாரம் திட்டம் செயல்படுத்துவது தொடர்பாக அதிகாரிகளுக்கு மின்சார வாரியம் சுற்றறிக்கை விடுத்துள்ளது.

தமிழ்நாட்டில் தவெக அரசு பொறுப்பேற்றதை தொடர்ந்து மின் நுகர்வோருக்கான தேர்தல் வாக்குறுதியான 2 மாதங்களுக்கு 200 யூனிட் இலவச மின்சாரம் வழங்கும் திட்டத்தைச் செயல்படுத்துவதற்கான அதிகாரப்பூர்வ பணிகள் தீவிரமடைந்துள்ளன. இத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பாக அனைத்து மாவட்டப் பொறியாளர்களுக்கும் தமிழ்நாடு மின்சார வாரியம் முக்கியச் சுற்றறிக்கையை அனுப்பியுள்ளது.

அதில், “ இலவச மின்சாரத் திட்டத்தை எவ்விதத் தடையுமின்றி கணக்கிடுவதற்கு ஏதுவாக, மின்வாரியத்தின் கட்டணக் கணக்கீட்டு மென்பொருளில் தேவையான அனைத்துத் தொழில்நுட்ப மாற்றங்களும் வெற்றிகரமாகச் செய்யப்பட்டுள்ளன. புதிய கூடுதல் மானிய விதிமுறைகளின்படி நுகர்வோரின் பயன்பாட்டைக் கணக்கிடும் வகையில் இந்த மென்பொருள் மேம்படுத்தப்பட்டுள்ளது. பணியாளர்களுக்கு விழிப்புணர்வு: மென்பொருளில் சேர்க்கப்பட்டுள்ள புதிய கூடுதல் மானிய விதிமுறைகள் மற்றும் கணக்கீட்டு முறைகள் குறித்து, அனைத்து மாவட்டங்களில் உள்ள உதவிப் பொறியாளர்கள், கணக்கீட்டாளர்கள் மற்றும் பணியாளர்களுக்கு உயர் அதிகாரிகள் உடனடியாகத் தெரியப்படுத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

நுகர்வோரின் 2 மாத மின் பயன்பாட்டில் முதல் 200 யூனிட்கள் இலவசம் என்பதைத் துல்லியமாகக் கணக்கிடுவதில் எவ்விதத் தவறும் நடந்துவிடக் கூடாது” எச்சரிக்கப்பட்டுள்ளது புதிய கட்டண முறை அமலுக்கு வருவதால், பொதுமக்கள் மத்தியில் எழும் சந்தேகங்களுக்கு ப் பணியாளர்கள் உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் சுற்றறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

இப்போதே பகிருங்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *